செவ்வாய், 9 செப்டம்பர், 2014

வலி

எனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும்,  என் மனக் கண்ணுக்குள் திரும்பச் சுற்றவிட்டுப் பார்க்கிறேன்.

வலிகளால் நிறைந்ததுதான்  என் பாதை
வலியோடேதான் இன்னும் பயணிக்கிறேன் என் பாதையில்..

 'வலி'யைப் பதிய
வார்த்தைகள் தேடியபொழுது,
'வேதனை'யாய் மாறிவிட்டிருந்தது.
வேதனை தீரப் பிரார்த்திப்பதா?
யாரிடமேனும் கூறி ஆற்றுப்படுத்திக்கொள்வதா? என்ற
மனக்கிலேசத்தின் மெல்லிடைவெளியில்
நரகத்திற்கு நகர்ந்துவிடுகிறது வேதனை.
மனிதத்தின் மறைவே
சொர்க்கமும்,நரகமும் அறிந்துகொள்ளவா?
அறிந்த அடையாளமும் இல்லை.
தெரிந்த தெளிவும் இல்லை.
மனித வாழ்வியலில்,
வலி எதார்த்தமாகிறது.

-
மகிவனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக